சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி , சுர்ஜித், சாந்தி, வித்யா, மனு அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு : (நன்றி: ஹரி)
எல்லாப் பூவிலும் பொதுவானது 'க' மற்றும் 'வ' குடும்பம்.
'க' பழத்திலும் இருப்பதால் இரண்டாம் எழுத்து 'க' தான் இருக்கவேண்டும்.
முதலோ மூன்றாவதோ 'வ' குடும்பம் இருக்க வேண்டும்.
பழம் வார்த்தையில் உள்ள 'அ', 'ழ' குடும்பம் வர முடியாது.
மீதமுள்ள பூ வார்த்தைகளைப் பார்த்தால், 'க', 'வ' குடும்பம் தவிர மற்ற எந்த குடும்பமும் வர முடியாது.
அப்படியானால் மீதமுள்ள குடும்பங்கள் 'ற', 'ண'. இவை இரண்டும் முதல் வார்த்தையில் வர முடியாது.
கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:
வலியறிதல்:
475. மிகவும் இலேசான மயில் தோகையைப் பாரம் ஏற்றிய வண்டியானாலும் அந்த மயில் தோகையையும் அளவுக்கு மீறி அந்த வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும்.
சரியாகக் கணித்த யோசிப்பவர், ஹரி பாலகிருஷ்ணன் , இ.கொ அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு :
முரடு, குணம்,பழம், ஞமலி - தலைக்கு 1 பூ/காய் - மொத்தம் 9 எழுத்துகள்.
எனவே ம"( ம-குடும்பம்) கண்டிப்பாய் உள்ளது. அதுவும் இரண்டாம் எழுத்தாய்.
வேறு எந்த எழுத்தை எடுத்துக் கொண்டாலும், மூன்று எழுத்துக்குள் கணக்கு முடியாது.
அவள் - காய்
நடுவில் ம" என்பதால்,
அ" அல்லது ள" சரியான இடத்தில்.
   ள" என்று எடுத்துக் கொண்டால் -
   துள்ளி - பூ
   காய் அல்லது பழம் வந்திருக்க வேண்டும்.
   எனவே ள" இல்லை. 1 பூ என்பது த".
எனவே அ"ம"த"
அவள் என்பதில், காய் என்பதால், அ அல்லாத அ"
ஞமலி என்பதில், காய் என்பதால், ம அல்லாத ம"
எனவே அமைதி/எமது/உமது எல்லாம் அடிபட சரி சொல்ல சொல்வதுதான் சரியான விடை.
கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும். (சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).
யாருமே சொல்லவில்லை என்றால் ஏதேனும் குறிப்புக் கொடுக்கலாம் என்று இருந்தேன், ஆனால் திரு.முத்து அவர்கள் சரியாக சொன்னதால் ஒன்றும் கொடுக்காமல் விட்டு விட்டேன்.
இந்தக் குறளை எடுத்தால் கலைப்பது கடினம், அந்தக் குறளை எடுத்தால் கண்டுபிடிப்பது சுலபம் என்று எதையும் ஒத்திப்போடும் வல்லமை உள்ள என் மனது நொண்டிச்சாக்குத் தேடியதால், கண்ணை மூடி இதை எடுத்தேன்.
நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:
358. பிறப்பு என்னும் அறியாமை நீங்கவேண்டுமென்ற நோக்கத்தோடு, நாம் அறிந்த பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்ததும் குற்றமற்றுச் செம்மையானதுமான பொருள் எது என்று கண்டறியும் அறிவுதான் மெய்யுணரும் அறிவு.
கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும். (சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).
For those who like the game, but are bored with the current format (me for one), there is some good news.
Yosippavar is making an interactive version of this game - and then some - 4 letter and 5 letter variations of the same. All very yummy...I will provide more updates soon.
1.
முரடு
2.
குணம்
3.
மங்கை
4.
அவள்
5.
பழம்
6.
மாயாவி
7.
நகம்
8.
துள்ளி
9.
கனம்
10.
ஞமலி
மூன்றெழுத்து - 4 விடை மற்றும் விளக்கம்
       
சரியாகக் கணித்த வித்யா, யோசிப்பவர், மனு,ஹரி பாலகிருஷ்ணன் ,திருமூர்த்தி, இ.கொ, சுர்ஜீத், திருமூர்த்தி அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.
பயணக்குறிப்பு : (இ.கொ விடையுடன் அனுப்பியது, அம்சமாக இருந்ததால் அப்படியே போடுகிறேன்)
காரம்,கவணை,கிள்ளை
இது மூணுமே காய் என்பதால் குடும்பதில் சரியான எழுத்து தவிர்த்து வேறு எழுத்து சரியான இடத்தில் இருக்கு. இங்க கா,க,கி மூணும் முதல் இடத்தில் இருப்பதால் கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ (கௌ எல்லாம் வராதுன்னு நம்பிக்கை) - இவற்றில் ஒண்ணுதான் முதல் எழுத்து.
அடுத்ததாக,
பகல், அழகு ரெண்டுமே ஒரே ஒரு பூதான். இந்த குடும்பம் முதலில் வர எழுத்து என்பதால் இந்த ரெண்டு சொற்களும் நமக்குப் புதுசா ஒண்ணும் சொல்லப் போறது இல்லை. ப,ல்,அ,ழ வரிசையில் வேற ஒண்ணும் இல்லை என்பதைத் தவிர.
சேதம், வாசனை,சந்தி - இந்த மூணும் கூட ஒரே ஒரு பூ. அதாவது சரியான குடும்பம் தப்பான இடம். எனவே ச குடும்பம் உண்டு ஆனா அது மூணாவது எழுத்துதான்.
கடைசியா ஞாயிறு - இதுல எதுவும் வராது.
ஆக முதலெழுத்து - கீ,கு,கூ,கெ,கே,கை, கொ,கோ
இரண்டாம் எழுத்து - ப,ல,அ,ழ,ஞ,ய,வ,ண,ர,ம,ள,ன,த,ந,ற குடும்பங்கள் இல்லாம வேற எதுவாயினும் - மீதியிருப்பது- ட,ங,
மூணாவது எழுத்து - ச குடும்பம்
எளிமையான, புழக்கத்தில் இருக்கும் சொல் என்று சொன்னதால் அகராதியைப் புரட்டவில்லை.
--- என்னும் சொல் உடனடியாகத் தோன்றுகிறது.
கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
5 பேராவது வந்து இப்படி கொடுமைப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் கட்டாயமாய் நிறுத்திக்கொள்கிறேன்.
அது வரை...