Showing posts with label Thirukkural Puzzle. Show all posts
Showing posts with label Thirukkural Puzzle. Show all posts

Sunday, November 27, 2011

குறள் வளை - 4

கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.





        இரைந்து உண்டனங் கறிஎன திருடன்
        காலை கணிப்பா லறிந்தது.



திருக்குறள் reference இங்கே.


குறள் வளை -2 விடை

சரியான விடை எழுதிய ஹரிஹரன்,முத்து, சுர்ஜித், சாந்தி, மனு அவர்களுக்கு நன்றி!


        பலசாலி குடுமிச் சாய்த்துப் பெறும்பீடம்
        அஞ்சி அப்பெண் காயின் .


        பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
        சால மிகுத்துப் பெயின்.




நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:

வலியறிதல்: 475. மிகவும் இலேசான மயில் தோகையைப் பாரம் ஏற்றிய வண்டியானாலும் அந்த மயில் தோகையையும் அளவுக்கு மீறி அந்த வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு முறிந்துவிடும்.




Friday, November 18, 2011

குறள் வளை -3

கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
(சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).





        பலசாலி குடுமிச் சாய்த்துப் பெறும்பீடம்
        அஞ்சி அப்பெண் காயின் .



திருக்குறள் reference இங்கே.


குறள் வளை -2 விடை

        நீள்துறவும் பெண்பெருமைப் பேசிச்சென்ற காதை
        அங்கனும் பின்னும் பொறிப்ப.


        பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
        செம்பொருள் காண்பது அறிவு.


யாருமே சொல்லவில்லை என்றால் ஏதேனும் குறிப்புக் கொடுக்கலாம் என்று இருந்தேன், ஆனால் திரு.முத்து அவர்கள் சரியாக சொன்னதால் ஒன்றும் கொடுக்காமல் விட்டு விட்டேன்.
இந்தக் குறளை எடுத்தால் கலைப்பது கடினம், அந்தக் குறளை எடுத்தால் கண்டுபிடிப்பது சுலபம் என்று எதையும் ஒத்திப்போடும் வல்லமை உள்ள என் மனது நொண்டிச்சாக்குத் தேடியதால், கண்ணை மூடி இதை எடுத்தேன்.


நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களின் உரை:

358. பிறப்பு என்னும் அறியாமை நீங்கவேண்டுமென்ற நோக்கத்தோடு, நாம் அறிந்த பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்ததும் குற்றமற்றுச் செம்மையானதுமான பொருள் எது என்று கண்டறியும் அறிவுதான் மெய்யுணரும் அறிவு.




Saturday, November 12, 2011

குறள் வளை -2

கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.
(சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).





        நீள்துறவும் பெண்பெருமைப் பேசிச்சென்ற காதை
        அங்கனும் பின்னும் பொறிப்ப.



திருக்குறள் reference இங்கே.


குறள் வளை -1 விடை

         வானிகர் கூந்தல் இருக்காத வனின்இளக
         உற்றப் பயனாய் இறுக.

        இனிய உளவாக இன்னாத கூறல்
        கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

நூறாவது குறள், விளக்கம் தேவையில்லாத குறள், எனக்கு மிகவும் பிடித்த/தேவையான குறள்.

Monday, November 7, 2011

குறள் வளை - 1

கீழே திருக்குறள் ஒன்று கலைந்து இருக்கிறது. எந்தக் குறள் என்று கண்டுபிடியுங்கள்.
பின்னூட்டமாகவோ தனிமடலிலோ (poongs<dot>seenu<at>gmail<dot>com) தெரிவிக்கவும்.

5 பேராவது வந்து இப்படி கொடுமைப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் கட்டாயமாய் நிறுத்திக்கொள்கிறேன்.
அது வரை...



         வானிகர் கூந்தல் இருக்காத வனின்இளக
         உற்றப் பயனாய் இறுக.



திருக்குறள் reference இங்கே.


(சொற் குற்றம்,பொருட் குற்றம் பார்க்க வேண்டாம் - it is just a jumble).